News October 24, 2025
BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும்…

தமிழகத்தில் நாளை(சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளித்ததை ஈடுசெய்ய நாளை பள்ளிகள் முழுநேரம் செயல்பட பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. செவ்வாய்க்கிழமை அட்டவணைப்படி வகுப்புகள் இயங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படலாம். SHARE IT.
Similar News
News October 25, 2025
ஜான்வி கபூருக்கு திருமணமா?

ஜான்வி கபூர் போட்ட ஒரு இன்ஸ்டா ஸ்டேட்டஸ் அவருக்கு கல்யாணமா என்ற கேள்வியை ரசிகர்களிடம் எழுப்பியது. ‘Save the date 29th Oct’ என்ற பதிவுதான் ரசிகர்களை என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை துண்டியுள்ளது. ஆனால் இப்போது ஜான்விக்கு திருமணம் நடக்க வாய்ப்பில்லை, இது நிச்சயம் படத்தின் ப்ரோமோஷனாகதான் இருக்கும் என்று ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தாலும் 29-ம் தேதி உண்மை தெரிந்துவிடும்.
News October 25, 2025
பயிர் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம்: அமைச்சர்

அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்களில், 33% மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் பயிர் சேதம் குறித்து கணக்கீடு செய்தபின், பாதிப்பு சதவிகிதத்திற்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். திமுக அரசு மீது குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் EPS பொய்யான குற்றச்சாட்டுகளை வைப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News October 25, 2025
இதை செய்தால் சேவல் சண்டைக்கு அனுமதி: HC

சேவல் சண்டைக்கு அனுமதி கேட்டு மதுரையை சேர்ந்த ஒருவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை HC, மனிதர்களால் ஏற்பாடு செய்யப்படும் விலங்கு சண்டை நிகழ்வுகளை சட்டம் வெளிப்படையாகத் தடை செய்வதாக கூறினார். அதேசமயம், ஜல்லிக்கட்டு போன்று சேவல் சண்டை நடத்துவதற்கு அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்தால், அதற்கும் அனுமதி அளிக்கலாம் எனக் கூறிய நீதிபதி G.R.விஸ்வநாதன் மனுவை தள்ளுபடி செய்தார்.


