News October 24, 2025
வீடு வீடாக செல்லும் தேர்தல் அலுவலர்கள்

தமிழகத்தில் S.I.R. எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது. இப்பணியில் 75,050 அலுவலர்கள் ஈடுபடுவார்கள் என்றும் வீடு வீடாக சென்று விண்ணப்பத்தை தேர்தல் அதிகாரிகள் வழங்குவர் எனவும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்து தர ஒரு மாதம் வரை அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 25, 2025
₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. வந்தது புதிய அறிவிப்பு

வேலூர், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், தேனியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நிறைவடைந்துவிட்டது. அதேநேரம் இம்மாவட்டங்களில் நவ.14-க்குள் கலெக்டர் ஆபிஸில் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதனிடையே, வரும் 28-ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும் இடங்களின் விவரங்களை அறிய <
News October 25, 2025
TN-ல் மழைக்கு 31 பேர் பலியாகியுள்ளனர்: KKSSR

தமிழகத்தில் அக்.1 முதல் 25-ம் தேதி வரை பெய்த மழைக்கு, 31 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் KKSSR தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகளுடன், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, ‘மோன்தா’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். முகாம்கள் தயாராக உள்ளதாகவும், ஏரிகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
News October 25, 2025
விஜய்யிடம் என்ன கேள்வி கேட்பீர்கள்?

2024-ல் தவெக உதயம், புத்தக விழா ஒன்றில் திருமாவுக்கு தூதுவிட்ட விஜய், 2025-ல் கட்சியின் ஓராண்டு நிறைவு, வீட்டிற்கு வரவைத்து வெள்ள நிவாரணம், 3 சனிக்கிழமைகள் பரப்புரை, 2 முறை கல்வி விருதுகள் என விஜய்யின் அரசியல் நுழைவை சுருக்கிவிடலாம். இந்த ஒன்றரை வருடத்தில் ஒருமுறை கூட செய்தியாளர்களை விஜய் சந்திக்கவில்லை (பின்னால் வர வேண்டாம் என கூறியது தவிர). இனி விஜய் ஊடகங்களை சந்தித்தால் என்ன கேள்வி கேட்கலாம்?


