News October 24, 2025

BREAKING: உருவாகிறது Montha புயல்.. சென்னை மக்களே ALERT

image

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக உருவெடுக்கும் என IMD கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, 26-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும். அதன்பின், 27-ம் தேதி புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு Montha என பெயரிடப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக 27-ம் தேதி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 25, 2025

இந்தியாவின் மிக பணக்கார ஸ்கூல்கள் இவைதான்!

image

கல்வியும், மருத்துவமும் நாட்டில் இலவசம் என்றாலும், குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த பெற்றோர்கள் பெரும் பணத்தை செலவு செய்கின்றனர். அந்த வகையில், 2025 – 26 ஆண்டு கல்வி கட்டணத்தின் அடிப்படையில் நாட்டில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஸ்கூல்களின் பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என அறிய போட்டோவை வலது பக்கமாக Swipe பண்ணி பாருங்க.

News October 25, 2025

₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. வந்தது புதிய அறிவிப்பு

image

வேலூர், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், தேனியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நிறைவடைந்துவிட்டது. அதேநேரம் இம்மாவட்டங்களில் நவ.14-க்குள் கலெக்டர் ஆபிஸில் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதனிடையே, வரும் 28-ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும் இடங்களின் விவரங்களை அறிய <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. SHARE IT.

News October 25, 2025

TN-ல் மழைக்கு 31 பேர் பலியாகியுள்ளனர்: KKSSR

image

தமிழகத்தில் அக்.1 முதல் 25-ம் தேதி வரை பெய்த மழைக்கு, 31 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் KKSSR தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகளுடன், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, ‘மோன்தா’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். முகாம்கள் தயாராக உள்ளதாகவும், ஏரிகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!