News October 24, 2025
தமிழ் சினிமா பிரபலம் மறைவு.. கண்ணீர் அஞ்சலி

மறைந்த இசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு இயக்குநர் பாக்யராஜ் அஞ்சலி செலுத்தினார். இதன்பின் பேசிய அவர், ரஹ்மான் எங்கேயாவது வெளியூர் போனா சபேஷை தான் இசையமைக்க கூப்பிடுவாங்க… அந்த அளவுக்கு அவருக்கு திறமை இருந்துச்சு. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய திறமைசாலி நம்மை விட்டு பிரியும்போது, மிகவும் கஷ்டமாக இருக்கிறது. தமிழ் சினிமா நல்ல இசைக் கலைஞரை இழந்துவிட்டது என்று உருக்கமாக தெரிவித்தார்.
Similar News
News October 25, 2025
வரலாற்றில் இன்று

*1881 – ஸ்பானிஷ் ஓவியர் பிக்காசோ பிறந்த நாள்.
*1854 – இந்தியாவில் அஞ்சல் துறை தொடங்கப்பட்டது.
*1951 – இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
*1987: கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் பிறந்த நாள்.
*2006 – பாண்டிச்சேரியின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.
News October 25, 2025
நெல் ஈரப்பதம்: தமிழகத்தில் மத்திய அரசு இன்று ஆய்வு

நெல் கொள்முதல் செய்வதற்கான அதிகபட்ச ஈரப்பத அளவை 17%-ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. பலத்த மழையின் காரணமாக அதை 22%-ஆக குறைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இந்நிலையில் நெல்லின் ஈரப்பதத்தை அளவை ஆய்வு செய்ய 3 குழுக்களை மத்திய அரசு அமைந்துள்ளது. இந்த குழுக்கள் இன்றும், நாளையும் செங்கல்பட்டு, தஞ்சை, நாகை, திருவாரூர், தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்கிறது.
News October 25, 2025
காலையில் இதை குடித்தால் இவ்வளவு நன்மைகள் வரும்!

சீரகம், ஓமம், சோம்பு ஆகிய மூன்றையும் ஊற வைத்த நீரை காலையில் குடிப்பதன் மூலம் உடலின் ஆரோக்கியத்தை எதிர்பாராத அளவில் மேம்படும். ▶செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, செரிமானம் சிறப்பாக இருக்கும் ▶உடல் எடையில் பெரிய மாற்றத்தைக் காணலாம் ▶உங்கள் சருமம் இயற்கையான ஆரோக்கியத்தை பெறும்▶கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். SHARE IT


