News October 24, 2025
பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான புதிய அறிவிப்பு

RTE-ன் படி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அக்.30 & 31 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக 81,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அக்.30-ல், விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை நடைபெறும். அக்.31-ல், விண்ணப்பங்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில், குலுக்கல் முறையில் (Random Selection) மாணவர் தேர்வு & சேர்க்கை நடத்தப்படவுள்ளது.
Similar News
News October 25, 2025
தீபாவளிக்காக சிறப்பு Stamp-ஐ வெளியிட்ட கனடா

தீபாவளி பண்டிகைக்காக, கனடா அஞ்சல் துறை சார்பில் சிறப்பு Stamp வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆங்கிலம், ஹிந்தியில் தீபாவளி என்ற வார்த்தையுடன் ரங்கோலி படம் இடம்பெற்றுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பை கொண்டாடும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சல் தலையை, இந்திய வம்சாவளியை சேர்ந்த கலைஞர் ரிது கனல் வடிவமைத்துள்ள நிலையில், இந்திய தூதரகம் இதற்கு நன்றி தெரிவித்துள்ளது.
News October 25, 2025
சற்றுநேரத்தில் நாடு முழுவதும் முடங்க போகிறது.. ALERT

நாடு முழுவதும் இன்று (அக்.25) மதியம் 1.10 மணிக்கு வங்கியின் UPI, IMPS, YONO ஆகிய இணைய சேவைகள் இயங்காது என SBI அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக NEFT & RTGS சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மீண்டும் மதியம் 2:10 மணிக்கு இயல்பு நிலைக்கு திரும்பும். இந்த இடைப்பட்ட நேரத்தில் ATM & UPI லைட் சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.
News October 25, 2025
அமைச்சர்கள் கேலி செய்கிறார்கள்: செல்லூர் ராஜு

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினால், அமைச்சர்கள் கேலி செய்வதாக செல்லூர் ராஜு குற்றஞ்சாட்டியுள்ளார். ஒன்றரை ஆண்டுகளாக என் வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்த முடியாத அளவுக்கு ரோடு படுமோசமாக உள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பினால், நான் ஃபார்ம் ஹவுஸுக்கு சென்றுவிட்டதாக அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் கேலி செய்து, தவறுகளை சமாளிக்கப் பார்க்கிறார்கள் என சாடினார்.


