News October 24, 2025

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் S.I.R.

image

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் S.I.R. தொடங்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தியாகராய நகர் தொகுதி வாக்காளர் நீக்கம், சேர்ப்புக்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்குவதாக ECI தெரிவித்துள்ளது.

Similar News

News October 25, 2025

SPORTS ROUNDUP: ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத பாக்.,

image

*வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினர் சின்னர், ஸ்வெரேவ் *ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினார் ரிபாகினா *மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒரு வெற்றிக் கூட பெறாமல் பாகிஸ்தான் வெளியேற்றம் *காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் இந்தியாவுக்கு எதிரான டி20-ல் களமிறங்க தயார்

News October 25, 2025

ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் பொன்மொழிகள்

image

*மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது, மனதை மாற்ற முடியாதவர்களால் எதையும் மாற்ற முடியாது. *இதைச் செய்யவே முடியாது என்று கூறும் நபர்கள் அதைச் செய்பவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. *சரியான வாய்ப்புக்காக காத்திருக்காதீர்கள், அதை உருவாக்குங்கள். *உங்கள் சோகமான தருணங்களை மணலில் எழுதுங்கள், உங்கள் நல்ல தருணங்களை கல்லில் எழுதுங்கள். *கற்பனையே படைப்பின் ஆரம்பமாகும்.

News October 25, 2025

காயம் ஏற்பட்டால் இதை செய்யக்கூடாது!

image

பொதுவாக தீ உள்பட எந்த காயமாக இருந்தாலும் முதலில் பலர் தேங்காய் எண்ணெய்யை அப்ளை செய்வது வழக்கம். ஆனால் அது தவறான வழிமுறையாம். ஏனென்றால் தேங்காய் எண்ணெய் காயத்தை ஆற்றாமல், அதன் ஹீலிங் பண்பை தடுத்து நிறுத்தி விடுமாம். எனவே காயம் ஏற்பட்டால் சுத்தமான தண்ணீரில் அதை கழுவி, அந்த இடத்தில் ஆன்ட்டி செப்டிக் கிரீம்கள் அப்ளை செய்வது போதுமானதாக இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE IT

error: Content is protected !!