News April 17, 2024
3 மாத நிலுவையுடன் வருகிறது ஊதியம்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி கடந்த மாதம் 4% உயர்த்தப்பட்டது. இந்தத் தொகை, சில ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மார்ச் மாத ஊதியத்துடன் வரவில்லை எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது திருத்தி அமைக்கப்பட்ட ஊதியத்தை ஏப்ரல் மாத சம்பளத்துடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 3 மாத நிலுவைத் தொகையுடன் ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News August 16, 2025
அந்த ஹீரோயின்தான் தனுஷின் தங்கையாம்!

தனுஷ் தற்போது இட்லிகடை படத்தை இயக்கி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நித்யா நடிக்க, இவர்களுடன் அருண்விஜய், சத்யராஜ், பார்த்திபன், ராஜ்கிரண் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் தனுஷுக்கு தங்கையாக ஷாலினி பாண்டே நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
News August 16, 2025
பட்டாவில் மாற்றம் செய்வது இனி ரொம்ப ஈசி..!

பட்டாவில் திருத்தம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிப்பது, அரசு அலுவலகங்களுக்கு செல்வது என இனி அலைய வேண்டாம். திருத்தம் செய்ய விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, ஏதேனும் ஒரு அடையாள ஆவணம், சொத்து குறித்த பத்திரங்கள், வில்லங்க சான்றிதழ் உள்ளிட்டவற்றுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு சென்றால் போதும். அனைத்து துறை அதிகாரிகளும் அங்கு இருப்பதால் வேலை உடனடியாக முடிந்து விடுகிறதாம்.
News August 16, 2025
3 நாள் STOP பண்ணுங்க… அதிசயம் நடக்கும்!

தொடர்ந்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் ஒரு 3 நாள்களுக்கு, போன் பயன்படுத்துவதை நிறுத்தினால், ஆச்சரியகரமான மாற்றம் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளைஞர்கள் சிலரை 72 மணிநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை நிறுத்தி சோதித்தனர். அப்போது அவர்களின் மூளை அதிசயிக்கத்தக்க முறையில் தன்னைத் தானே ரீபூட் செய்துகொண்டு சிறப்பாக செயல்பட்டதை கண்டறிந்தனர். நீங்களும் ட்ரை பண்ணலாமே?