News October 24, 2025
நாகை மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 45,500 கனஅடியாக நேற்று மாலை அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து 60,000 கன அடி வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு கலெக்டர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் கூறியுள்ளார்.
Similar News
News October 25, 2025
பழந்தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளின் இசை நிகழ்ச்சி

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் வழங்கும் பரம்பரா கலைக்களம் கலைக்குழுவின் நிறுவனர் சவுண்டு மணி பங்குபெறும் பழந்தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளின் இசை நிகழ்ச்சி, நாளை (அக்.26) புதிய கடற்கரையில் மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டு, பழந்தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளின் இசை நிகழ்ச்சியை கண்டு களிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைத்துள்ளனர்.
News October 24, 2025
ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA), மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் வை.செல்வராஜ் எம்பி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகை மாலி எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.
News October 24, 2025
நாகை: ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட உள்ளனர்
5.மேலும் விபரங்களுக்கு <
இதனை அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!


