News October 24, 2025

இபிஎஸ் உடன் மீண்டும் இணைகிறார்.. திடீர் ட்விஸ்ட்

image

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க 10 நாள் கெடு விதித்ததால், EPS – செங்கோட்டையனுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில், தான் 10 நாள் கெடு விதிக்கவில்லை; என்னுடை கருத்து தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாக கூறி செங்கோட்டையன் ட்விஸ்ட் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, சில நாளாக அமைதியாக இருந்த அவர், மீண்டும் EPS உடன் இணைந்து தேர்தல் & கட்சிப்பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News October 26, 2025

UPDATE: ஷ்ரேயஸ் ஐயருக்கு என்ன ஆச்சு?

image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ODI-யில் ஃபீல்டிங்கின் போது காயமடைந்த ஸ்ரேயஸ் ஐயருக்கு இடது விலா எலும்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக, அவர் கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு மேல் கிரிக்கெட்டில் இருந்து விலகலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால், அவர் நவம்பர் 30-ம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ODI-யில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

News October 26, 2025

திமுகவில் இணைந்தனர்

image

2026 சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்ல வேண்டும் என்ற ஸ்டாலின் ஆணையை நிறைவேற்ற திமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அடித்தளம் போடும் வகையில் மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் K.S.மூர்த்தி முன்னிலையில், அதிமுகவை சேர்ந்த பலர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.

News October 26, 2025

CM நிகழ்ச்சிக்காக பனைகள் வெட்டப்பட்டதா? Fact Check

image

தென்காசியில் CM நிகழ்ச்சிக்காக சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டப்பட்டதாக செய்தி பரவியது. இந்நிலையில், TN அரசின் தகவல் சரிபார்ப்பகம் இது தவறான செய்தி என்று தெரிவித்துள்ளது. 2 தனிநபர்கள் தங்களின் ஆபத்தான நிலையில் உள்ள 4 பனைகளை, உரிய அனுமதி பெற்று வெட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அரசாணை 238-ன் படி, ஒரு மரத்துக்கு 10 என்ற வீதத்தில் 40 பனைகளை வளர்க்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!