News October 24, 2025

ஸ்ரீவி: மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு சிறை

image

அருப்புக்கோட்டை பகுடியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை அளித்துள்ளார். வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் சிறுமியின் தந்தை மற்றும் குற்றத்தை மறைத்ததாக தாயையும் கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.தாய் விடுவிப்பு.

Similar News

News October 25, 2025

விருதுநகரில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04563-260310
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை ஐகோர்ட் : 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 25, 2025

விருதுநகர்:5 வயது சிறுமி மீது இடிந்து விழுந்த சுவர்

image

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி சேதுராயனேந்தலை சேர்ந்த ஆனந்தி 29. இவரது மகள் சமுத்திர 5.நேற்று முன்தினம் மாலை சிறுமி வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்தார்.அப்போது திடீரென வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில், சிறுமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

News October 25, 2025

விருதுநகர்: ஆசை வார்த்தைகள் கூறி பல கோடி மோசடி

image

ராஜபாளையம் சேத்தூர் அதிமுக நிர்வாகி பட்டுராஜன்(52,) அதிமுக உறுப்பினர் கந்தநிலா (55) மற்றும் ராணி நாச்சியார் ( 53) உள்ளிட்ட சிலர் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என ஆசை வார்த்தை கூறி பலரிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக விருதுநகர் மாவட்ட சிபிசிஐடி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணைக்குப் பின் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் மூவரையும் கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!