News October 24, 2025
புதுவை: மாணவனை கொன்ற பெண்ணிற்கு ஆயுள்

காரைக்காலில் 8-ம் வகுப்பு மாணவன் பாலமணிகண்டன் என்பவரை கடந்த 2022-ம் ஆண்டு பள்ளி நிகழ்ச்சியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற வழக்கில், சகாய ராணி விக்டோரியா என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதித்து காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை காரைக்கால் மக்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.
Similar News
News October 25, 2025
புதுவை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

புதுவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News October 25, 2025
புதுவை: பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்!

புதுவை வில்லியனூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்ற போது, கோபாலன் கடை பகுதியில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் கத்தியை காட்டி அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று, அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கோபாலன் கடை பகுதி அருண்குமார் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.
News October 25, 2025
புதுவை: கணினி திறன் தேர்வு ஒத்திவைப்பு

புதுவை அரசின் தோ்வு அமைப்பின் உறுப்பினர் செயலர் ஜெய்சங்கா் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில், தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்ட கிராம நிா்வாக அதிகாரிக்கான கணினித் திறன் தோ்வு 26.10.2025 அன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது, நிா்வாகக் காரணங்களால் இந்தத் தோ்வு 02.11.2025 அன்று நடைபெறும்.” என்று தெரிவித்துள்ளார்.


