News October 24, 2025
ராசிபுரம் வக்கீல் சங்க நிர்வாகி பலி!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் மற்றும் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் காமராஜ் (55).இவர், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு டூவீலரில் சென்றபோது, தவறி விழுந்து படுகாயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 24, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (24.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு தங்கள் உட்கோட்ட அதிகாரியை, வழங்கப்பட்டுள்ள தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
நாமக்கல்: ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தால் வேலை!

நாமக்கல் மக்களே, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ONGC) நிறுவனம் தேசிய அளவில் உள்ள 2,623 பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து தொழிற்பயிற்சி வாய்ப்பை பெறலாம். மாதம் ரூ.12,300 உதவித்தொகையாக வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News October 24, 2025
நாமக்கல்: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <


