News October 24, 2025

புது வியூகத்துடன் மீண்டும் களத்தில் விஜய்

image

கரூர் சம்பவத்துக்கு பின் வீட்டிலேயே முடங்கியுள்ள விஜய் மீண்டும் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என அக்கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மக்கள் சந்திப்பு, ரோடு ஷோக்களை தவிர்த்து விட்டு, பொதுக்கூட்டங்களில் மட்டும் பங்கேற்று பேச விஜய் திட்டமிட்டுள்ளார் . மாலை 3 – 5 மணிக்குள் பொதுக்கூட்டங்களை நடத்தி முடிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

Similar News

News October 25, 2025

கீறல் விழுந்த பான்களை வீட்டில் பயன்படுத்துறீங்களா?

image

நான்ஸ்டிக் டெஃப்லாண் பான்களின்(Non-stick Teflon pans) பயன்பாடு அதிகரித்துள்ளது. அவற்றில் கீறல்கள் விழுந்தாலும் தொடர்ந்து பயன்படுத்துகின்றோம். ஆனால், ஒரு கீறல் மூலமே 9,000-க்கும் மேற்பட்ட மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் வெளியாவதாகவும், முழுவதுமாக சேதமடைந்தால், 2.3 மில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் வெளிப்படும் என்றும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இவை புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை. ALERT!

News October 25, 2025

தமிழ் நடிகர் காலமானார்.. கண்ணீருடன் இறுதி அஞ்சலி

image

நடிகை மனோரமாவின் ஒரே மகனும் நடிகருமான பூபதி(70) சென்னையில் நேற்று காலமானார். அம்மா பயன்படுத்திய கட்டிலிலேயே அவரது உயிர் பிரிந்தது பெரும் சோகம். தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, பூபதி உடலுக்கு குடும்பத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான பூபதி பல படங்களில் நடித்திருந்தார். RIP

News October 25, 2025

செல்வப்பெருந்தகையின் பேச்சு வருத்தம் அளிக்கிறது: அமைச்சர்

image

செம்பரம்பாக்கம் ஏரியை அத்தொகுதியின் MLA ஆன தன்னிடம் சொல்லாமல் திறந்ததற்காக நீர்வளத்துறை அதிகாரிகளை <<18077962>>செல்வப்பெருந்தகை<<>> சாடினார். இதுதொடர்பாக பேசிய அமைச்சர் துரைமுருகன், செல்வப்பெருந்தகை போன்ற கட்சி தலைவர்கள் கடுமையான பேசியது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். உண்மையை தெரிந்து கொண்டு அவர் பேச வேண்டும் எனவும், சின்ன சின்ன நீர் திறப்புகளுக்கு எல்லாம் MLA-வை கூப்பிடமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!