News October 24, 2025
கரூர் விவகாரம்: CBI பதிவு செய்த FIR கோர்ட்டில் தாக்கல்

கரூரில் கூட்ட நெரிசலில் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து அவர்கள் தங்களது விசாரணையை தொடங்கினர். இந்தநிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ தரப்பில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை வரும் நாட்களில் தீவிரப்படுத்த உள்ளனர்.
Similar News
News October 24, 2025
திங்கள்கிழமை பள்ளிகளுக்கு இங்கு விடுமுறை

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27-ம் தேதி ( திங்கள்கிழமை) விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். அதேபோல், இவ்விழாவையொட்டி, நெல்லைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவ்விழாவிற்காக தமிழகம் முழுவதும் ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
News October 24, 2025
1 விநாடிக்கு 600 GB வேகம்: ஸ்டார்லிங்க் பணிகள் துரிதம்

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் அதிவேக இண்டர்நெட் சேவையை தொடங்க தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக மும்பை, லக்னோ, ஐதராபாத் உள்ளிட்ட 9 நகரங்களில் சிக்னல் மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2026 தொடக்கத்தில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 விநாடிக்கு 600 GB வேகத்தில் இண்டர்நெட் சேவை கிடைக்கும் என கூறப்படுகிறது.
News October 24, 2025
BREAKING: புதிய கட்சி தொடங்கினார்

யாதவ மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜாராம், புதிய கட்சியை தொடங்கியுள்ளார். திருத்தணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியதாக அவர் அறிவித்தார். மேலும், கட்சியின் லோகோவையும் ராஜாராம் அறிமுகம் செய்து வைத்தார். 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிட உள்ளார்.


