News October 24, 2025
வரலாற்றில் இன்று

*1801 – சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டிய சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்
*1857 – உலகின் முதலாவது கால்பந்தாட்ட அணி செபீல்டு, இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது
*1945 – ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது
*1980 – நடிகை லைலா பிறந்த தினம்
*1994 – கொழும்பு தேர்தல் கூட்டத்தில், நடந்த குண்டுவெடிப்பில் 52 பேர் கொல்லப்பட்டனர்
Similar News
News October 24, 2025
யார் வாக்குகளை பிரிக்கிறார் பிரசாந்த் கிஷோர்?

பிஹாரின் அடுத்த CM யார் என்பதை பிரசாந்த் கிஷோர் பெறும் வாக்குகள் தீர்மானிக்க உள்ளன. சமீபத்திய சர்வேயின் படி, 57% இளைஞர்கள் நிதிஷ் ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். PK இல்லாவிட்டால் இந்த வாக்குகள் பெரும்பாலும் தேஜஸ்விக்கே செல்லும். ஜெகநாத் மிஸ்ராவுக்கு பிறகு 35 ஆண்டுகளாக உயர்சாதி CM இல்லாத விரக்தியில் இருக்கும் Brahmins & Upper castes, PK பக்கம் திரும்பினால் அது NDA வெற்றியை பாதிக்கும்.
News October 24, 2025
விஜய் இப்படி செய்தால் தற்கொலைக்கு சமம்: டிடிவி

EPS-ன் தலைமையை விஜய் ஏற்றுக்கொண்டால், அது தற்கொலைக்கு சமம் என டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார். தொண்டர்களை உற்சாகப்படுத்தவே EPS கூட்டணி குறித்து ஏதேதோ கூறி வருகிறார் எனவும், அவர் செய்த துரோகத்துக்கு அவர் நிச்சயம் தேர்தலில் வீழ்த்தப்படுவார் என்றும் கூறியுள்ளார். மேலும், கூவி கூவி அழைக்கும் கல்லாப்பெட்டி பழனிசாமியை தோளில் தூக்கி வைத்துக்கொள்ள விஜய் வருவாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 24, 2025
போரின் போது தங்க நகைகளை வாரி வழங்கிய பெண்கள்

USA, ஜெர்மனி உள்ளிட்ட 10 நாடுகளில் உள்ள தங்கத்தை காட்டிலும் இந்திய பெண்களிடம் கூடுதலாக (25,488 டன்) தங்கம் இருப்பதாக X-ல் புள்ளிவிவரம் வெளியானது. இந்த புள்ளிவிவரம் தனது சிறுவயது நினைவுகளை மீட்டெடுப்பதாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். 1962 சீன போரின் போது, இன்றைய மதிப்பில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்க நகைகளை இந்திய பெண்கள் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கியதை நினைவுகூர்ந்துள்ளார்.


