News October 24, 2025
பிஹார் தேர்தலில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்: PM

பிஹாரில் இரட்டை என்ஜின் அரசு அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து வளர்ச்சி பணிகளில் புதிய உத்வேகம் பிறந்ததாக, தேர்தல் பரப்புரையில் PM மோடி தெரிவித்துள்ளார். RJD-யின் மோசமான ஆட்சி குறித்து இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பேசுவார்கள் என்றும், பாஜகவினர் இளைஞர்களிடம் அதை கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். பிஹார் தேர்தலில் இளைஞர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
Similar News
News October 24, 2025
யார் வாக்குகளை பிரிக்கிறார் பிரசாந்த் கிஷோர்?

பிஹாரின் அடுத்த CM யார் என்பதை பிரசாந்த் கிஷோர் பெறும் வாக்குகள் தீர்மானிக்க உள்ளன. சமீபத்திய சர்வேயின் படி, 57% இளைஞர்கள் நிதிஷ் ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். PK இல்லாவிட்டால் இந்த வாக்குகள் பெரும்பாலும் தேஜஸ்விக்கே செல்லும். ஜெகநாத் மிஸ்ராவுக்கு பிறகு 35 ஆண்டுகளாக உயர்சாதி CM இல்லாத விரக்தியில் இருக்கும் Brahmins & Upper castes, PK பக்கம் திரும்பினால் அது NDA வெற்றியை பாதிக்கும்.
News October 24, 2025
விஜய் இப்படி செய்தால் தற்கொலைக்கு சமம்: டிடிவி

EPS-ன் தலைமையை விஜய் ஏற்றுக்கொண்டால், அது தற்கொலைக்கு சமம் என டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார். தொண்டர்களை உற்சாகப்படுத்தவே EPS கூட்டணி குறித்து ஏதேதோ கூறி வருகிறார் எனவும், அவர் செய்த துரோகத்துக்கு அவர் நிச்சயம் தேர்தலில் வீழ்த்தப்படுவார் என்றும் கூறியுள்ளார். மேலும், கூவி கூவி அழைக்கும் கல்லாப்பெட்டி பழனிசாமியை தோளில் தூக்கி வைத்துக்கொள்ள விஜய் வருவாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 24, 2025
போரின் போது தங்க நகைகளை வாரி வழங்கிய பெண்கள்

USA, ஜெர்மனி உள்ளிட்ட 10 நாடுகளில் உள்ள தங்கத்தை காட்டிலும் இந்திய பெண்களிடம் கூடுதலாக (25,488 டன்) தங்கம் இருப்பதாக X-ல் புள்ளிவிவரம் வெளியானது. இந்த புள்ளிவிவரம் தனது சிறுவயது நினைவுகளை மீட்டெடுப்பதாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். 1962 சீன போரின் போது, இன்றைய மதிப்பில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்க நகைகளை இந்திய பெண்கள் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கியதை நினைவுகூர்ந்துள்ளார்.


