News October 24, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.23) இரவு 10 மணி முதல் இன்று (அக்.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News October 24, 2025
புதுகை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News October 24, 2025
புதுக்கோட்டை: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

புதுகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு புதுகை மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04322-220585) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News October 24, 2025
புதுகை: மனைவியின் சகோதரரை கொலை செய்த கணவன்

கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்த நடராஜன் (45) என்பவர் தஞ்சை, கபிஸ்தலம் அருகே செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய அக்கா ராணி குடும்ப பிரச்சனை காரணமாக கணவர் சின்னதம்பியை பிரிந்து நடராஜனுடன் வசித்து வந்துள்ளார். ராணியை மீண்டும் சேர்ந்து வாழ சின்னதம்பி அழைத்தபோது, நடராஜன் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சின்னத்தம்பி, நடராஜனை துண்டினால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.


