News October 24, 2025
புதுச்சேரி: நாளை மின்தடை அறிவிப்பு

புதவை தேத்தாம்பாக்கம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இதன் காரணமாக நாளை (அக்.24) காலை 10 மணி முதல் 1 மணி வரை திருக்கனூர், கொண்டாரெட்டிபாளையம், கொடத்தூர், கைகோலபட்டு, மணலிபட்டு, செட்டிபட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என புதுவை மின்துறை அறிவித்துள்ளது.
Similar News
News October 24, 2025
புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெரும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த 3-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் நாளை (அக்.25) அனைத்து பள்ளிகளும் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வழக்கம் போல், வெள்ளிக்கிழமை அட்டவணைப்படி பள்ளிகள் இயங்கும் என கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி தெரிவித்துள்ளார்.
News October 24, 2025
புதுவை: ஜிப்மரில் காப்பீடு திட்ட பதிவு துவக்கம்

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மருக்கு சிகிச்சைக்கு வரும் புதுச்சேரி, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நோயாளிகள் ஆதார் மற்றும் ஆதாரில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணையும் ஓ.டி.பி., சரிபார்ப்பிற்காக எடுத்து வந்தால் 14 இலக்கம் கொண்ட இலவசமாக ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்திற்கான பதிவு செய்வதோடு, பயனாளர் அட்டை பதிவிறக்கம் செய்து தரப்படும் என ஜிப்மர் இயக்குனர் நேற்று தெரிவித்துள்ளார்.
News October 24, 2025
புதுவை: அனைத்து துறை ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு தொகுதியில் நிலுவையில் உள்ள அடிப்படை வசதிகளை விரைந்து முடித்திட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் புதுவை உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, ஆதி திராவிடர் நலத்துறையைச் சார்ந்த அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


