News October 24, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (அக்.23) இரவு 10 மணி முதல் இன்று (அக்.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News October 24, 2025

நாகை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற <>அரசு செயலியில்<<>> உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News October 24, 2025

நாகை: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

image

நாகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு நாகை மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04365-248121) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News October 24, 2025

நாகை மக்களுக்கு எச்சரிக்கை

image

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 45,500 கனஅடியாக நேற்று மாலை அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து 60,000 கன அடி வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு கலெக்டர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் கூறியுள்ளார்.

error: Content is protected !!