News October 24, 2025
கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம்

கடந்த 2024 -25 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணித பாடத்தில் தேர்ச்சி குறைவாக அளித்த பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமையில் அக்.23ஆம் தேதி அன்று நடைபெற்றது. மேலும் இந்த கல்வி ஆண்டில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்கான பல்வேறு விதமான அறிவுரைகள் வழங்கப்பட்டது.
Similar News
News October 24, 2025
கள்ளக்குறிச்சி: மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் இவ்வளவா?

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 21ம் தேதி பரவலான மழை பெய்தது. இந்த மழையினால் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சேதாரம் உண்டாகியுள்ளது. இதில் மொத்தம் 51 கூரை வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளது. 5 பசுமாடுகள் மற்றும் 1 ஆடு என 6 கால்நடைகள் இறந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தைச் சார்ந்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News October 24, 2025
நடந்துச்சென்ற முதியவர் மீது அரசு பேருந்து மோதி விபத்து

சூளாங்குறிச்சியை சேர்ந்த கோவிந்தராஜ் என்ற எண்பது வயது முதியவர் கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று அக்.23 பணிக்காக உழவர் சந்தை அருகே உள்ள வணிக வளாகம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதியதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News October 23, 2025
கள்ளக்குறிச்சி: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9094055559-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


