News October 23, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் அதிகாரி விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 24, 2025

திருவள்ளூர்: சாலையில் தேங்கிய நீரில் விழுந்த தங்கம்

image

பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே பெண் ஒருவர் நடந்து சென்றபோது அவர் காதில் அணிந்திருந்த ஒரு பக்க தங்க கம்மல் கழன்று சாலை பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் விழுந்தது. நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு சாலையில் தேங்கிய மழைநீரில் விழுந்த தங்க கம்மலை வட மாநில தொழிலாளர்கள் கண்டுபிடித்து கொடுத்தனர். சாலை குண்டும், குழியுமாக இல்லாதிருந்தால் கம்மலை கண்டுபிடிக்க இந்த போராட்டம் தேவையில்லை என சிலர் வசைபாடி சென்றனர்.

News October 24, 2025

திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் ரத்து

image

திருத்தணி முருகன் கோயிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழா ஒட்டி நேற்று முதல் நாளை மறுநாள் வரை மூலவர் முருகப்பெருமானுக்கு காலை, 9:00 மணி முதல் நண்பகல், 11:00 மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. இதனால் 2 மணி நேரம் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 23, 2025

திருவள்ளூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திருவள்ளூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8098822551-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!