News October 23, 2025
தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.23) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. குணவர்மன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்
Similar News
News October 24, 2025
தருமபுரி: 9 ஆண்டுகளுக்கு பிறகு கோர்ட் அதிரடி தீர்ப்பு

தருமபுரி: வீரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தனபால் (58). முன்னாள் ராணுவ வீரரான இவரை, நிலத்தகராறில், 2016ல் இவரது அண்ணன் மகன்களான சேகர் மற்றும் ஸ்ரீதர் இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தனபால் கொடுத்த புகாரின் பெயரில் இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் தற்போது தருமபுரி நீதிமன்றம் 2 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.3000 அபராதம் விதித்துள்ளது.
News October 24, 2025
மழைபொழிவில் 2ம் இடம் பிடித்த தருமபுரி

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அரக்கோணத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தருமபுரி அரூரில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், மோகனூர், நாமக்கல், நீலகிரி, திருப்பூரில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் வரும் 27 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News October 23, 2025
அரசு அரசு பட்டுக்கூடு அங்காடியில் விலை நிலவரம்

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு, (அக்.23) இன்று விவசாயிகள் 15 கிலோ 765.250 பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.629-க்கும், குறைந்தபட்சமாக ரூ.578.92-க்கும், சராசரியாக ரூ.520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மொத்த விற்பனை மதிப்பு ரூ.443022/- என அங்காடி அலுவலர்கள் தெரிவித்தனர்.


