News October 23, 2025

பெற்றோர் இறந்ததால் இளைஞர் தற்கொலை

image

நெய்வேலி வட்டம் 30-ஐ சேர்ந்தவர் ஆகாஷ்(23). இவரின் பெற்றோர் ஜெயக்குமார் மற்றும் சீதாலட்சுமி இருவரும் இறந்து விட்டனர். இதனால் பெற்றோர் உயிரிழந்ததால் ஆகாஷ் தன்னுடன் யாரும் இல்லை என்று மன வருத்தத்தில் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News October 24, 2025

கடலூர்: கம்மியான விலையில் பைக் வேண்டுமா!

image

கடலூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குழுவினரால், போதைப்பொருள் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு 4 சக்கர வாகனம், 26 இருசக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலமானது வருகிற அக்.30-ம் தேதி கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் காலை 8 மணி முதல் 10 மணி வரை வாகனங்களை பார்வையிட்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

News October 24, 2025

கடலூர்: பாம்பு கடித்து பெண் பலி

image

வடலூர் அடுத்த ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் கலா என்கிற கலைச்செல்வி(57). இவர் அதே பகுதியில் உள்ள தனது விளை நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது இடது காலில் பாம்பு கடித்தது. பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலா நேற்று (அக்.23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 24, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.24) இரவு 10 மணி முதல் இன்று (அக்.24) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!