News October 23, 2025
லோடு மேன் பேச்சை கேட்டு EPS கூறுகிறார்: உதயநிதி

EPS கூறியது போல் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என DCM உதயநிதி தெரிவித்துள்ளார். தஞ்சையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல் கொள்முதல் தொடர்பாக <<18072011>>EPS<<>> பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும், லோடு மேன் ஒருவர் கூறிய தகவலை வைத்து நாளொன்றுக்கு 800 மூட்டைகள் நெல் கொள்முதல் என கூறுவதாகவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News October 24, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை… அறிவித்தார் கலெக்டர்

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27-ம் தேதி ( திங்கள்கிழமை) விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். அதேபோல், இவ்விழாவையொட்டி, நெல்லைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவ்விழாவிற்காக தமிழகம் முழுவதும் ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
News October 24, 2025
பாத வலி தீர்க்கும் ‘Contrast Bath therapy’

பாதங்களில் வலி உள்ளவர்களுக்கு `கான்ட்ராஸ்ட் பாத்’ சிகிச்சை பலனளிக்கும். இதை வீட்டிலேயே செய்யலாம். ஒரு பாத்திரத்தில் வெந்நீரும், இன்னொரு பாத்திரத்தில் சாதாரண தண்ணீரையும் நிரப்பிக்கொள்ள வேண்டும். அதில் கணுக்கால் வரை நீரில் முக்கி பாதத்துக்கான பயிற்சிகளை கொடுக்க வேண்டும். இருவகை தண்ணீரிலும் மாற்றி மாற்றி பயிற்சிகளை செய்ய வேண்டும். தினமும் காலை, மாலை இருவேளையும் செய்தால் வலி மறையும்.
News October 24, 2025
அழகின் தீயில் வாட்டும் ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரகுல் ப்ரீத் சிங் திருமணத்துக்கு பின் பெரிதாக படங்களில் தலை காட்டவில்லை. ஆனாலும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என கவர்ச்சியில் ஆளை சாய்க்கும் போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங் அழகில் மயங்கிய இளசுகள் ஹார்ட்டின்களை பறக்கவிடுகின்றனர். அவரது அழகை ஆராதிக்க மேலே உள்ள போட்டோஸை SWIPE செய்து பாருங்கள்.


