News October 23, 2025
நகை கடன் வாங்கியோருக்கு… முக்கிய தகவல்

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த தவறினால், நகைகளை ஏலம் விடுவதே நடைமுறை. அதற்கு முன் உரிமையாளரிடம் (வாடிக்கையாளர்) முறையாக அறிவித்திருக்க வேண்டும். ஏல இருப்பு விலை(RESERVE PRICE) நகையின் மதிப்பில் 90% இருக்க வேண்டும். 2 ஏலங்கள் தோல்வியுற்ற பிறகு இருப்பு விலையை 85% ஆக குறைக்கலாம். ஏலத்தில் கூடுதலாக கிடைக்கும் தொகையை 7 நாள்களுக்குள் கடன் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டும். SHARE IT.
Similar News
News October 24, 2025
கட்சிக்கு கெடு விதிக்கவில்லை: செங்கோட்டையன் விளக்கம்

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க கட்சி தலைமைக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. பின்னர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அமித்ஷாவை சந்தித்ததை அடுத்து, அமைதி காத்து வந்தார். இந்நிலையில் கட்சிக்கு கெடு எதுவும் விதிக்கவில்லை என்றும் 10 நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றே கூறியதாகவும் அவர் புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.
News October 24, 2025
ஐபோன் கலர் மாறுவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

ஆரஞ்ச் நிறத்தின் விற்பனை செய்யப்பட்ட ஐபோன் 17 ப்ரோ மற்றும் 17 ப்ரோ மேக்ஸ் செல்போன்கள் பிங்க் நிறத்தில் மாறுவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் போட்டோஸை பகிர்ந்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதனிடையே ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ள திரவங்களை கொண்டு ஐபோன்களை துடைக்க வேண்டாம் என ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. உங்க ஐபோன் கலர் மாறுச்சா?
News October 24, 2025
SPORTS ROUNDUP: சாதனை நாயகியாக மாறும் ஸ்மிருதி

*வியன்னா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினர் சின்னர், ஸ்வெரேவ் *புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது பாட்னா பைரேட்ஸ் *வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ODI தொடரை கைப்பற்றிய வங்கதேசம் *சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த மெக் லானிங் சாதனையை சமன் செய்த ஸ்மிருதி மந்தனா *தெற்காசிய தடகள போட்டி ராஞ்சியில் இன்று தொடக்கம்


