News October 23, 2025

கரூரில் வெள்ள அபாய எச்சரிக்கை; ஆட்சியர் அறிவிப்பு

image

கர்நாடகா கே.ஆர்.எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால், கரூர் மாவட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாயம் உருவாக வாய்ப்புள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவித்துள்ளார். அரசு துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News October 24, 2025

அக்.31 கடைசி அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டமான PM-YASASVI-Top Classes Education in schools for OBC, EBC & DNT students-இன் கீழ் தேசிய கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News October 24, 2025

கரூரில் மின் தடை அறிவிப்பு..உங்கள் ஏரியா இருக்கா?

image

ஆண்டிசெட்டிப்பாளையம் துணை மின்நிலையம், ராஜபுரம் துணை மின நிலையம், ரெங்கநாதபுரம் துணை மின் நிலையம், தென்னிலை துணை மின் நிலையம்,நொய்யல் துணை மின் நிலையம் ஆகிய துணை மின்நிலையம் இன்று மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதனை உங்கள் பகுதி மக்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க!

News October 23, 2025

கரூர்: டிகிரி போதும்.. India Post-ல் வேலை!

image

கரூர் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 29.10.2025 ஆகும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!