News October 23, 2025

சென்னையில் கனமழை.. துயர மரணம்

image

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை மாங்காட்டில் மழைநீரில் மூழ்கி பிரனிகா ஸ்ரீ என்ற 2 வயது குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, மழை நீரில் மூழ்கி இறந்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News October 29, 2025

நடிகர் பிரபு வீட்டில் பதற்றம்.. போலீசார் குவிப்பு!

image

சென்னை தி.நகரில் உள்ள நடிகர் பிரபு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், போலீசார் குவிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. அதேபோல் அமெரிக்க துணை தூதரகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக CM ஸ்டாலின் தொடங்கி, EPS, ரஜினி, விஜய் என பல பிரபலங்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர் கதையாகி வருகிறது.

News October 29, 2025

ChatGPT-யில் அதிகரிக்கும் தற்கொலை உரையாடல்கள்

image

மனிதர்களுடன் நாம் செலவழிக்கும் நேரம் குறைத்து செல்போன், கணினி உள்ளிட்டவற்றுடன் கடத்தும் நேரம் அதிகரித்துள்ளது. மனித உரையாடல்கள் குறையும் போது வாழ்க்கையின் மீது நம்பிக்கை இழக்கும் இளம் தலைமுறைக்கு தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கின்றன. இதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு வாரமும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை தொடர்பான உரையாடல்களை, ChatGPT-யிடம் நடத்துவதாக அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.

News October 29, 2025

மறைந்தும்.. மறையாத ‘கவிஞர் வாலி’

image

கருத்தாழமிக்க எளிய தமிழ் சொற்களை பாடல்களில் அமைத்து, அழியா புகழ் பெற்ற கவிஞர் வாலிக்கு இன்று பிறந்தநாள். சினிமா பாடல்களில் அவரின் முத்திரை இல்லாத இடமே இல்லை எனலாம். ‘மின்வெட்டு நாளில் இங்கு, மின்சாரம் போல வந்தாயே’ என்ற வரிகளை எழுதிய போது வாலிக்கு வயது 81. அவருக்குள் காதலும், எழுத்தும் கொஞ்சமும் குறையவில்லை என்பதற்கு இந்த வரிகள் சிறந்த எடுத்துகாட்டு. வாலியின் வரிகளில் உங்களை கவர்ந்தது எது?

error: Content is protected !!