News October 23, 2025

மாங்காடு பகுதியில் நீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

image

குன்றத்தூர் அருகே மாங்காடு ஜனனி நகரைச் சேர்ந்த பிரினிகா ஸ்ரீ(2). வீட்டின் அருகே இருந்த காலிமனையில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். குழந்தையின் தாய் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் வீட்டில் இருந்த பிரணிகா காணாமல் போனதாகவும், அப்போது அவரை தேடிப்பார்த்த போது வீட்டிற்கு வெளியே இருந்த தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 24, 2025

காஞ்சிபுரம் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

காஞ்சிபுரத்தில் நேற்று அக் (23) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 24, 2025

20 கிராம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய செய்யாறு ஆறு காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக செல்லக்கூடிய இந்த ஆறில் 17 ஆயிரம் கன அடி நீர் செல்வதால் இரு கரையோரம் உள்ள சிலாம்பாக்கம், கருவேப்பம்பூண்டி, மெய்யாடும்பாக்கம், திருமுக்கூடல், மலையங்குளம், வயலக்காவூர், மாகரல், இளையனார் வேலூர், கம்பராஜபுரம் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News October 23, 2025

காஞ்சிபுரம்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, காஞ்சிபுரம் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9600394037-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!