News October 23, 2025

சேலம் மாநகர காவல் – சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!

image

சேலம் மாநகர காவல்துறை இன்று (அக்.23) பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. குறிப்பாக மழைக்காலங்களில் விபத்துகளை தவிர்க்க இரு வாகனங்களுக்கும் குறைந்தது 10 மீட்டர் இடைவெளி விட்டு பயணிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது உயிர் பாதுகாப்பிற்கும் சாலையில் நெரிசல் தவிர்ப்பதற்கும் உதவிகரமாகும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Similar News

News October 24, 2025

சேலம் மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு!

image

தற்போது மாநிலம் முழுவதும் மழை தொடர்ந்து பெய்து வண்ணம் உள்ளது. இதனால் சேலத்தில் மழையின் பாதுகாப்பு கருதி எடுக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி அறிக்கை வெளியிட்டார். காய்ச்சிய குடிநீரை மட்டுமே பருக வேண்டும், காய்கறிகளை அதிக அளவு உண்ண வேண்டும், தேவையான மருந்து பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும், மின்சாதன பொருட்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.

News October 23, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்டோபர்.23) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News October 23, 2025

மேட்டூர் ஆணை நிலவரம் குறித்து ஆட்சியர் அறிவிப்பு!

image

மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடி எட்டியுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிக அளவு உள்ளதால், தற்போது 45,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மென்மேலும் நீர்வரத்து அதிகம் உள்ளதால் தொடர்ந்து 60,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாகவும், அதனால் கரையோர மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!