News October 23, 2025
திருப்பூர்: கார் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூரில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே நேற்று இரவு அடையாளம் தெரியாத கார் மோதியதில், 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி அறிந்த அவிநாசிபாளையம் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி உயரிழந்தவர் யார் ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 24, 2025
திருப்பூர்: இரவு நேர ரோந்து காவலர்களின் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். மேலும் உடுமலைப்பேட்டை, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 100 அழைக்கவும்!
News October 23, 2025
எறிபந்து போட்டிக்கு தனியார் பள்ளி மாணவன் தேர்வு!

தேசிய அளவிலான எறிபந்து போட்டிக்கான வீரர்கள் தேர்வு பெருந்துறையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியின் மாணவன் பவின் கலந்து கொண்டு தேசிய அளவில் நடைபெறும் எறிபந்து போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News October 23, 2025
திருப்பூர்: வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பில் வாராந்திர பொதுமக்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் இந்த குறைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.