News October 23, 2025
PM மோடி பங்கேற்காதது ஏன்? மலேசிய PM விளக்கம்

தீபாவளி காரணமாகவே PM மோடி ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மோடியின் முடிவை மதிப்பதாக கூறிய அவர், PM மோடி காணொலி மூலம் கலந்து கொள்வார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, காணொலி மூலம் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ள PM மோடி, ஆசியான் – இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்த எதிர்நோக்கியுள்ளதாக தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Similar News
News October 24, 2025
மனிதர்களுக்கு இனி வேலை இருக்காது: எலான் மஸ்க்

AI டெக்னாலஜி வரவால் பல நிறுவனங்கள் ஆள்குறைப்பு செய்துவருகின்றன. அமேசான் நிறுவனமும் 2027-க்குள் 1,60,000 பணியாளர்களை நீக்கிவிட்டு, பதிலாக ரோபோக்களை அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த எலான் மஸ்க், ‘AI-யும் ரோபோக்களும் இனி எல்லா வேலைகளையும் எடுத்துக் கொள்ளும். மனிதர்கள் விரும்பினால் காய்கறிகள் வளர்ப்பது போன்ற வேலைகள் செய்யலாம்’ என X-ல் பதிவிட்டுள்ளார். உங்கள் கருத்து?
News October 24, 2025
₹1000 கோடி கனிமவள கொள்ளை: அன்புமணி

தென் மாவட்டங்களில் ₹1000 கோடி கனிமவள கொள்ளை நடைபெற்றுள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இந்த கனிமவள கொள்ளையில் ஆளும் கட்சிக்கு தொடர்பு உள்ளதாகவும், இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தினால் அது நியாயமாக இருக்காது என்றும் கூறியுள்ளார். எனவே தென்மாவட்டங்களில் நடத்த கனிமவள கொள்ளை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
News October 24, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க