News April 17, 2024

தேனி: பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு

image

மக்களவைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக இன்று முதல்(ஏப்.17,18,19) வரை பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை தீவிர களப் பணியாற்றிட வேண்டும் எனவும், 24 மணி நேரமும் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் மேலும் தெருக்கள், குறுகிய வீதிகளிலும் ரோந்து செல்ல வேண்டும் என தேனி தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News August 20, 2025

தேனியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் ஆக.22 அன்று காலை காலை 10.00 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9894889794 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

தேனி: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

image

குடும்ப வன்முறை எதிர்கொள்ளும் தேனி மாவட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு. குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஏதாவது வன்முறையை எதிர்கொண்டால், உடனடியாக மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் 9894854837 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம். இது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். SHARE பண்ணுங்க!

News August 19, 2025

தேனியில் 296 கடைகளுக்கு சீல் வைப்பு

image

தேனி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 255 கிலோ கஞ்சா, 163 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு 271 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் புகையிலை விற்பனை செய்த 296 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.75, 25,000 அபராதம் விதிக்கப்பட்டு சுமார் 2042.86 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து 35 குற்றவாளிகள் கைது செய்துள்ளனர் என தேனி எஸ்பி சினேகா சினேஹாபிரியா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!