News April 17, 2024
பழனி வழியே சிறப்பு ரயில் இயக்கம்

மக்களவைத் தேர்தலையொட்டி சென்னை செல்லும் பயணிகளின் வசதிக்காக தென்னக ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன்படி, கோவையிலிருந்து ஏப்.19,21 ஆகிய தேதியில் இரவு 8.40 மணிக்கு கிளம்பி பழனி வழியே, திருச்சி, தஞ்சை, கடலூர் வழியாக சென்னை எக்மோருக்கு காலை 10.05 மணிக்கு செல்லும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு ஆரம்பமாகி உள்ளது.
Similar News
News December 31, 2025
திண்டுக்கல்: ஒரே குடும்பத்திற்கும் 20 ஆண்டு சிறை

திண்டுக்கல்லைச் சேர்ந்த 17 வயது சிறுமியை 2024-ம் ஆண்டு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சூரியகுமார் (24) & இவருடன் உடந்தையாக இருந்த தந்தை வசிமலை (47), தாய் மாரியம்மாள் (45) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில் மூவருக்கும் 20 ஆண்டு சிறை மற்றும் தலா ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு!
News December 31, 2025
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திண்டுக்கல் வருகை!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கோயம்புத்தூர் செல்லும் வழியில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று வருகை தந்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அவர்களை நேரில் சந்தித்து மலர்கொத்துகள் வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தார்.
News December 31, 2025
பழனியில் கோடி கணக்கில் மோசடி? பெண் அதிரடி கைது!

பழனி மற்றும் தாழையூத்தை சேர்ந்த ஆடிட்டர் முத்துநாராயணன் என்பவர் தனது நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர் கலையரசி (43), ரஞ்சிதா (34) மற்றும் கவுதம் (34) ஆகிய மூவரும் கடந்த 2 ஆண்டுகளாகப் போலி ரசீதுகள் தயாரித்து சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்ததாகக் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மேலாளர் கலையரசியை கைது செய்து, தலைமறைவாக உள்ள மற்ற இருவரைத் தேடி வருகின்றனர்.


