News October 23, 2025

தர்மபுரியில் காற்றுமாசு இயல்பு விட அதிகரிப்பு

image

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு & ஒலி மாசு அளவை கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தர்மபுரியில் வழக்கமாக காற்றின் தர குறியீடு 100 புள்ளியாக இருக்கும், தீபாவளி பட்டாசு வெடிக்கப்பட்டதில் மாசுபாடு அதிகரித்து 120 புள்ளிகளும் வரை அதிகரித்து இருக்க வாய்ப்புள்ளதாக நேற்று (அக்.22) அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

Similar News

News October 23, 2025

தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.23) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. குணவர்மன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்

News October 23, 2025

அரசு அரசு பட்டுக்கூடு அங்காடியில் விலை நிலவரம்

image

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு, (அக்.23) இன்று விவசாயிகள் 15 கிலோ 765.250 பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.629-க்கும், குறைந்தபட்சமாக ரூ.578.92-க்கும், சராசரியாக ரூ.520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மொத்த விற்பனை மதிப்பு ரூ.443022/- என அங்காடி அலுவலர்கள் தெரிவித்தனர்.

News October 23, 2025

தர்மபுரியில் தூய்மை பணியாளர்களின் நலத்திட்ட உதவி

image

தருமபுரி நகர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று அக்.23 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு டார்ச் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் தர்மபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!