News October 23, 2025
திருவாரூர்: வெளிநாடு செல்ல விரும்புவோர் கவனிக்க!

திருவாரூர் மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற இங்கே <
Similar News
News October 23, 2025
திருவாரூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News October 23, 2025
திருவாரூர்: விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் நேற்று தீர்மான கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரனிடம் வழங்கினர். அந்த மனுவில், “கொள்முதல் நிலையங்களில் தேங்கியிருக்கும் நலன்களை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்; கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் விவசாய கடனை அலைக்கழிக்காமல் வழங்கிட வேண்டும்.” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இதில் விவசாய சங்கத்தின் பொருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
News October 23, 2025
திருவாரூர்: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள 50 மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: வங்கி வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.64,000-ரூ.1,20,940
4. வயது வரம்பு: 25-32
5. கடைசி தேதி : 30.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…