News October 23, 2025
நாகையில் மாவட்ட அளவில் ஒரு நாள் பயிற்சி

நாகப்பட்டினம் மாவட்டம், முகமை ஊரக வளர்ச்சி கூட்டரங்கில் மகளிர் திட்ட பணியாளர்களுக்கு மன நலம் குறித்த ஒரு நாள் பயிற்சி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இணை இயக்குனர் சித்ரா தலைமையில் இன்று நடைபெற்றது. உதவி திட்ட அலுவலர்கள் சரவணன், சண்முக வடிவு, சந்திரசேகரன், அறிவழகன் முன்னிலை வகித்தனர். இதில் ஸ்ரீரங்கபாணி மனநலம் குறித்த பயிற்சி அளித்தார்.
Similar News
News October 23, 2025
நாகை: அடையாளம் தெரியாத ஆண் சடலம்

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே நேற்று மாலை சுமார் 47 வயது மதிக்கத்தக்க அடையாளம் ஆண் சலடம் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த நாகூர் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
News October 23, 2025
நாகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News October 23, 2025
நாகை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

நாகை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <