News October 23, 2025
நிவாரணம் பற்றி பேச EPS-க்கு அருகதை இல்லை: சேகர்பாபு

மழை நிவாரண பணிகள் குறித்து பேச EPS-க்கு அருகதை இல்லை என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்த அவர், ஆளும்கட்சியாக இருந்தபோது கால்கூட தரையில் படாமல்தான் EPS பணியாற்றினார் என விமர்சித்தார். மேலும், கொரோனா காலத்தில் கூட உயிரை துச்சமென நினைத்து களத்தில் பணியாற்றியது அன்றைய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்தான் என்றார்.
Similar News
News October 23, 2025
முதல் கார் இப்படிதான் இருந்ததா?

இன்றைய கார்களின் வடிவமைப்பை கண்டு நாம் ஆச்சரியப்படுகிறோம். ஆனால், உலகின் மிகவும் பிரபலமான கார் பிராண்டுகளின் முதல் கார் எப்படி இருந்தது என்று தெரியுமா? அவர்களது பயணம் எங்கிருந்து தொடங்கியது என்பதை விளக்கும் விதமாக மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்த கார் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 23, 2025
RAIN ALERT: 20 மாவட்டங்களுக்கு வந்தது அறிவிப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. அதன்படி, சென்னை, கோவை, திண்டுக்கல், குமரி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
News October 23, 2025
CM, அமைச்சர்கள் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்: EPS

விவசாயிகளுக்காக போராடுவதாக கூறும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட நெல் கொள்முதல் பிரச்னைகளை பேசுவதில்லை என EPS தெரிவித்துள்ளார். முதலமைச்சரும், அமைச்சர்களும் பொய்யான கற்பனை உலகில் வாழ்வதாகவும், மக்கள் சுபிட்சமாக வாழ்வதாக தங்களுக்கு தானே சொல்லிக் கொண்டு கனவுலகில் வாழ்வதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், முளைவிட்ட நெல்லை கணக்கிட்டு, உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.