News April 17, 2024

மயிலாடுதுறைக்கு பணி ஒதுக்கீடு செய்யும் முறை

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்காக வாக்குப்பதிவு அலுவலர்கள், காவல்துறையினர், தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதள மென்பொருள் செயலி வழியாக வாக்குசாவடி வாரியாக மூன்றாம் கட்டமாக பணி ஒதுக்கீடு செய்யும் முறை மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 16, 2025

மயிலாடுதுறை கலெக்டர் நேரில் ஆய்வு

image

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீட்டிற்கு வீடு தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பை சேகரிப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து கொடுக்கிறார்களா என தூய்மை பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

News September 16, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோயில், மணல்மேடு, சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு உள்ளிட்ட இடங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை ஆறு மணி வரை ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.

News September 15, 2025

மயிலாடுதுறைக்கு இப்படி ஒரு வரலாறா?

image

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில், (ஆந்திரம் உள்ளடக்கியது) 29 ஊர்கள் மட்டுமே நகரம் என அடையாளம் காணப்பட்டு நகராட்சிகளாக ஆக்கப்பட்டது. அதில் முக்கியமாக நமது மயிலாடுதுறை நகராட்சியும் ஒன்று. இதன் மூலம் பறந்து விரிந்த சென்னை மாகாணத்தில் மயிலாடுதுறையின் முக்கியத்துவத்தை அறிய முடிகிறது. மேலும் இங்கு பல வாணிபங்கள் நடந்ததையும் இது உறுதிப்படுத்துகிறது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!