News October 23, 2025
திருச்சி: வங்கி வேலை.. APPLY NOW

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள 50 மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: வங்கி வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.64,000-ரூ.1,20,940
4. வயது வரம்பு: 25-32
5. கடைசி தேதி : 30.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!
Similar News
News October 23, 2025
திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News October 23, 2025
வயலூர் முருகன் கோவிலில் திருக்கல்யாண விழா அறிவிப்பு

திருச்சி, வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா நேற்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சுவாமி நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் 28-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
News October 23, 2025
திருச்சி: பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்

சுபமுகூர்த்த தினங்களில் அதிக அளவில் பத்திர பதிவு நடைபெறும் என்ற அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை (அக்.24) கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வழக்கமாக 100 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில் 150 டோக்கன்கள், 200 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில் 300 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.