News October 23, 2025
கிருஷ்ணகிரி: 32 பேருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது

கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 5 போலீஸ் உட்கோட்டங்களில், 31 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. மாவட்ட எஸ்.பி தங்கதுரை கூறுகையில், ‘மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நடப்பாண்டு இதுவரை 32 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News October 23, 2025
கிருஷ்ணகிரி: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கிருஷ்ணகிரி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 6379860065 -ஐ அழைத்து புகார் அளிக்கலாம். *இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க*
News October 23, 2025
கிருஷ்ணகிரி பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

கிருஷ்ணகிரி பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணு
News October 23, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (அக்.23) காலை 6 மணி நிலவரப்படி 206.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 29 மி.மீ மழையும், ராயக்கோட்டை 19 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, ஓசூர் 18.2 மி.மீ, நெடுங்கல் 16.4 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக் கூறப்படுகிறது.