News October 23, 2025

மோசமான நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம்

image

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை ரூ.80 லட்சம் செலவில் 6 மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் சீரமைத்தது. இந்நிலையில், பேருந்து நிலையத்தில் கழிப்பறைகள் துர்நாற்றம் வீசுவதாகவும், மழைநீர் கால்வாய்கள் உடைந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. அதேபோல், சாலையில் பெரிய அளவிலான பள்ளங்களுடன் மழைநீர் தேங்கி நிற்பதால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News October 23, 2025

காஞ்சிபுரம்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, காஞ்சிபுரம் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9600394037-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 23, 2025

மாங்காடு பகுதியில் நீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

image

குன்றத்தூர் அருகே மாங்காடு ஜனனி நகரைச் சேர்ந்த பிரினிகா ஸ்ரீ(2). வீட்டின் அருகே இருந்த காலிமனையில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். குழந்தையின் தாய் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் வீட்டில் இருந்த பிரணிகா காணாமல் போனதாகவும், அப்போது அவரை தேடிப்பார்த்த போது வீட்டிற்கு வெளியே இருந்த தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 23, 2025

காஞ்சிபுரம் பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

image

காஞ்சிபுரம் பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!