News October 23, 2025

நாகையில் இடுபொருட்கள் உற்பத்தி பயிற்சி

image

கீழ்வேளுர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் இடுபொருட்கள் உற்பத்தி பயிற்சி வருகிற அக்.27ம் தேதி தொடங்கி அடுத்து வரும் 26 நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் 8675842228 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு வேளாண் கல்லூரி முதல்வர் ரவி தெரிவித்துள்ளார்.

Similar News

News October 23, 2025

நாகை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

நாகை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <>இணையதளத்தில் <<>>புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

News October 23, 2025

நாகை: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

image

நாகை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது அதிமுக ஆட்சியில் தினமும் 1000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்து உடனுக்குடன் பணம் வழங்கப்பட்டது. இப்போது 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக அமைச்சர் தவறான தகவலை தருகிறார். ஆனால் 900 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யடுவதாக தெரிவித்தார்.

News October 23, 2025

நாகையில் மாவட்ட அளவில் ஒரு நாள் பயிற்சி

image

நாகப்பட்டினம் மாவட்டம், முகமை ஊரக வளர்ச்சி கூட்டரங்கில் மகளிர் திட்ட பணியாளர்களுக்கு மன நலம் குறித்த ஒரு நாள் பயிற்சி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இணை இயக்குனர் சித்ரா தலைமையில் இன்று நடைபெற்றது. உதவி திட்ட அலுவலர்கள் சரவணன், சண்முக வடிவு, சந்திரசேகரன், அறிவழகன் முன்னிலை வகித்தனர். இதில் ஸ்ரீரங்கபாணி மனநலம் குறித்த பயிற்சி அளித்தார்.

error: Content is protected !!