News October 23, 2025

கடலூர்: தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

image

குள்ளஞ்சாவடி அடுத்த தங்கலிகுப்பத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் என்பவரது மகன் தொழிலாளி மணி (55). இவர் நேற்று தனக்கு சொந்தமான ஆடு, மாடுகளை பெருமாள் ஏரிக்கரை அருகில் உள்ள வடிகால் வாய்க்கால் அருகே மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென வாய்க்காலில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News October 23, 2025

கடலூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (அக்.,23) காலை 8.30 மணி நிலவரப்படி பெலாந்துறை 32.5 மி.மீ, கீழ்செருவாய் 26 மி.மீ, மே.மாத்தூர் 23 மி.மீ, வேப்பூர் 19.1 மி.மீ, காட்டுமைலூர் 19 மி.மீ, தொழுதூர் 16 மி.மீ என மாவட்டம் முழுவதும் ‌173.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. உங்கள் பகுதியில் மழையா கமெண்ட் பண்ணுங்க!

News October 23, 2025

கடலூர்: நாளை எந்தெந்த இடங்களில் முகாம் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.,24) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு வெளியானது. கடலூர் ஓடி என்‌.எஸ் மகால், வடலூர் ஆர்‌.சி‌.சர்ச் மண்டபம், தர்மநல்லூர் மேல்நிலைப் பள்ளி, காடாம்புலியூர் ஊராட்சி ஒன்றிய பெண்கள் தொடங்க பள்ளி, தொழுதூர் மேல்நிலைப் பள்ளி, குமாரபுரம் கிருஷ்ணசாமி கல்லூரியில் நடைபெற உள்ளது.

News October 23, 2025

கடலூர்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

கடலூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <>இணையதளத்தில் <<>>புகாரளியுங்கள். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!