News October 23, 2025

மழை காலத்தில் இந்த கசாயம் குடிங்க!

image

✱தேவை: வெற்றிலை, கற்பூரவல்லி இலை, கண்டந்திப்பிலி, மல்லி விதைகள், சீரகம், மிளகு, திராட்சை, மஞ்சள் தூள், சுக்குப்பொடி, வெற்றிலை ✱உலர் திராட்சையை நீரில் ஊறவைக்கவும். வெற்றிலை, கற்பூரவல்லி தனியா, மிளகு, கண்டந்திப்பிலி ஆகியவற்றை நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு, சீரகம், மஞ்சள் தூள், சுக்குப்பொடியுடன் திராட்சையை சேர்த்து மசித்து கொள்ளவும். இதனை வடிகட்டி, தேன் கலந்து குடிக்கலாம். SHARE IT.​

Similar News

News October 23, 2025

பிறந்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமை… கையை பாருங்க

image

உ.பி.,யின் நொய்டாவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் பச்சிளம் குழந்தைக்கு கொடுத்த தவறான சிகிச்சையால், கையை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தவறான ஊசி தான் காரணம் என்றும், இதுபற்றி ஹாஸ்பிடலில் கூறியும் கண்டுகொள்ளவில்லை எனவும் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. இதை விசாரிக்க 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. இம்மாதிரியான மருத்துவ தவறுகளை எப்படி தடுப்பது?

News October 23, 2025

FLASH: முடிவை மாற்றினார் விஜய்

image

கரூர் சம்பவத்துக்கு, விஜய் தாமதமாக வந்தது, போக்குவரத்து நெரிசல் ஆகியவை காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க ஜெ., பாணியில் தன்னுடைய பிரசாரத்தை மீண்டும் தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஹெலிகாப்டரில் பிரசாரம் செய்ய முடிவெடுத்திருக்கிறாராம். இதற்காக ஒரு நிறுவனத்திடம் 4 ஹெலிகாப்டர்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக பனையூர் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

News October 23, 2025

பைசனில் என்னையே பார்க்கிறேன்: அண்ணாமலை

image

தீபாவளிக்கு வெளியான ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த அண்ணாமலை, பல காட்சிகளில் தன்னையே பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிந்தது என தெரிவித்துள்ளார். மேலும், தடைகள் அனைத்தையும் கடந்து சாதித்து காட்டிய மணத்தி கணேசன் கதையை மாரி செல்வராஜ் சிறப்பாக காட்டியிருக்கிறார் எனவும், சமூகத்தில் ஒற்றுமை வேண்டும் எனவும் பதிவிட்டிருக்கிறார்.

error: Content is protected !!