News April 17, 2024
திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியினர் வாகன பேரணி

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடையுள்ள நிலையில் இறுதி கட்ட பரப்புரையாக திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி திருப்பூர் மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
Similar News
News November 4, 2025
JUST IN: திருப்பூர் அருகே விபத்து

திருப்பூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியின் வாகனம் பல்லடத்தில் இருந்து திருப்பூர் நோக்கி குழந்தைகளை அழைக்க சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளியின் வேன் சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது. இதில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். இவ்விபத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 4, 2025
திருப்பூர்: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டால்

திருப்பூர் மக்களே, பட்டா மாற்றம், சிட்டா, சாதி சான்றிதழ், இருப்பீட மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு சாம் கண்டிப்பாக ஒருமுறையாவது விஏஓ, தாசில்தார் அலுவலகம் செல்ல வேண்டியது இருக்கும். அப்போது அங்கு அதிகாரிகள் முறையாக பணி செய்யாமல் லஞ்சம் கேட்டால் (0421-2482816) என்ற எண்ணில் புகார் அளிக்கவும். (SHARE பண்ணுங்க)
News November 4, 2025
பல்லடம் அருகே தீ பற்றி எரிந்த பேருந்து

பல்லடம் அருகே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பெரும்பாளி பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்புறம் தீ பற்றி எறிய தொடங்கியது. தொடர்ந்து உள்ளே இருந்த 15 பயணிகள் பத்திரமாக எந்த சேதமும் இன்றி உயிர்தப்பினர். இத்தீவிபத்தில் பேருந்து முற்றிலுமாக தீயில் எரிந்து சேதமானது


