News October 22, 2025
பள்ளி விடுமுறையில்… மாணவர்களுக்கு உத்தரவு

மழைக் காலத்தையொட்டி பள்ளி விடுமுறையில் மாணவர்கள் கவனமாக இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, விடுமுறை நாள்களில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதையும், அங்கு குளிப்பதையும் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மாணவர்கள் செல்வதை தவிர்ப்பதற்கு பெற்றோர்களும் HM-களும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE
Similar News
News October 23, 2025
மாத்திரைகள் ஏன் கலர்கலராக உள்ளன?

நவீன யுகத்தில் பலரின் வாழ்க்கை மாத்திரியால்தான் இயங்கிக் கொண்டிருக்கு. அப்படி இருக்கையில் மாத்திரைகள் ஏன் பல கலர்களில் இருக்கு என யோசித்ததுண்டா? ஒரு முக்கிய காரணம், படிக்காதவர்கள் கூட நிறத்தை வைத்து சரியான மத்திரையை நேரத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும். மேலும், குறைவான வீரியமுள்ள மருந்துகள் பளிச் என்ற நிறத்திலும், வீரியமுள்ள மருந்துகள் அடர்த்தியான நிறத்தில் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
News October 23, 2025
அதிமுக ஆட்சியில் ₹2,000 கோடி ஒப்பந்த பணிகளில் முறைகேடு

EPS-ன் நெருங்கிய நண்பர்கள், Ex. அமைச்சர் SP.வேலுமணி தொடர்பான நிறுவனம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் ₹2,000 கோடி சாலை ஒப்பந்த பணிகளை, விதிகளை மீறி பெற்று அரசுக்கு ₹20 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ADMK ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சியில் நடந்த ஒப்பந்த முறைகேடு தொடர்பாக DVAC விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
News October 23, 2025
ஐசக் நியூட்டனின் பொன்மொழிகள்

*நமக்குத் தெரிந்தவை ஒரு துளி அளவு, நமக்குத் தெரியாதவை ஒரு கடல் அளவு. *தீர்க்கமான அனுமானம் இல்லாமல் பெரிய கண்டுபிடிப்பு எதுவும் நிகழ்த்தப்படவில்லை. *பிழைகள் கலையில் இல்லை, கலைஞர்களில் உள்ளது. *எனது கருவிகளையும் பொருட்களையும் மற்றவர்கள் செய்துதருவார்கள் என்று காத்திருந்திருந்தால், நான் ஒருபோதும் எதையும் செய்திருக்க முடியாது. *ஒவ்வொரு செயலுக்கும் அதற்குச் சமமான மற்றும் எதிரான எதிர்ச்செயல் உண்டு.