News October 22, 2025

காங்கிரஸில் பூகம்பத்தை ஏற்படுத்திய CM மகன்

image

தனது தந்தை அரசியல் வாழ்வின் இறுதிகட்டத்தில் இருப்பதாக சித்தராமையாவின் மகன் யதிந்திரா பேசியுள்ளது அம்மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, தற்போதைய அமைச்சர் சதிஷ் ஜர்கிஹோலி காங்கிரஸ் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கூறியதும் சர்ச்சையாகியுள்ளது. சித்தராமையா Vs டிகே சிவக்குமார் என்ற இரு துருவ ஆதரவு நிலைப்பாடு இருக்கும் நிலையில், கட்சியில் புதிதாக ஒருவரை யதிந்திரா முன்னிறுத்தியுள்ளார்.

Similar News

News October 23, 2025

மழையில் பாழாகும் நெல் மூட்டைகள்… யார் பொறுப்பு?

image

கொள்முதலுக்கு வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழாவதை கண்டு நெஞ்சம் பதறுகிறது. விவசாயிகள் கடன்பட்டு அறுவடை செய்ததை மழையில் இருந்து காப்பாற்ற ஒரு பாதுகாப்பான கிடங்கை கூட அரசால் கட்ட முடியாதா? ஒவ்வொரு கிடங்கிலும் 10,000 மூட்டைகள் பாதுகாப்பின்றி அழிகின்றனவாம். பசி போக்கும் உணவை பாதுகாக்க முடியவில்லை எனில், மாடல் ஆட்சிகளாலும், வல்லரசு பெருமையாலும் என்ன பயன் என மக்கள் கேட்கின்றனர்.

News October 23, 2025

CSK-வில் அஸ்வினுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர்

image

IPL-ல் இருந்து அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்க CSK திட்டமிட்டுள்ளது. குஜராத் அணியும் ₹3.2 கோடிக்கு சுந்தரை டிரேட் செய்ய ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரை சரியாக குஜராத்தால் பயன்படுத்த முடியவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சுந்தர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் CSK-வுக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 23, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 497
▶குறள்:
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.
▶பொருள்:ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.

error: Content is protected !!