News October 22, 2025

எஸ்.பி அலுவலகத்தில் நடைப்பெற்ற குறைதீர்வு கூட்டம்.

image

திருப்பத்தூரில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (அக்.22) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 16 மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

Similar News

News January 29, 2026

திருப்பத்தூர்: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி!

image

திருப்பத்தூர் மக்களே, உங்களுக்கு தேவையான
1) சாதி சான்றிதழ்
2)வருமான சான்றிதழ்
3)முதல் பட்டதாரி சான்றிதழ்
4)கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5)விவசாய வருமான சான்றிதழ்
6)சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7) குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <>லிங்கில் கிளிக் <<>>செய்து அப்ளை செய்யவும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

திருப்பத்தூரில் கோர விபத்து!

image

நாட்றம்பள்ளி அடுத்த குத்து பகுதியில் இன்று (ஜன.29) அதிகாலை 4 மணி அளவில் மண் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கொத்தூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (25) என்பவர் உயிரிழந்தார். மற்றொரு வாகன ஓட்டுனரான அருண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 29, 2026

ஜோலார்பேட்டையில் சரமாரி தாக்குதல்!

image

ஜோலார்பேட்டை அருகே பெரியமூக்கனூர் கிராமத்தில் கோவிந்தராஜ் மற்றும் இந்திராகாந்தி குடும்பத்தினரிடையே நீண்டகாலமாக சொத்து தகராறு இருந்துள்ளது. நிலத்தை அளக்கச் சென்றபோது ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் கற்களால் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்த 8 பேரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புகார்களின் அடிப்படையில் 8 பேர் மீது ஜோலார்பேட்டை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

error: Content is protected !!