News October 22, 2025
அடுத்த மாநாட்டை அறிவித்தார் சீமான்

திருச்சியில் வரும் 2026 பிப்ரவரி 7-ம் தேதி ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டை’ நடத்த போவதாக சீமான் அறிவித்துள்ளார். நம் இனத்தின் திருவிழா என்பதால், அனைவரும் கூடுவோம் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுவரை ‘மரங்களின் மாநாடு’, ‘மலைகளின் மாநாடு’, ‘ஆடு மாடுகளின் மாநாடு’ ஆகியவற்றை நடத்தியுள்ள அவர், வரும் நவம்பர் 15-ம் தேதி ‘தண்ணீர் மாநாட்டையும்’ நடத்த உள்ளார்.
Similar News
News March 19, 2026
காலம் வேறு… காட்சி வேறு!

இன்று டெல்லி சென்றுள்ள EPS, தன்னை சந்திக்க அமித்ஷா இன்னும் <<19425630>>நேரம் ஒதுக்கவில்லை<<>> என்றார். காலச்சக்கரத்தில் 1998-ஐ ரீவைண்ட் செய்யுங்கள். ஜெயலலிதாவின் ஆதரவு கடிதத்துக்காக வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பல மணிநேரம் காத்துக் கிடந்தனர். இதனால் பதவியேற்பும் தாமதமானது. வாஜ்பாய் தூதராக அதிமுகவின் ஆதரவை கேட்டு போயஸ் கார்டன் வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸை நீண்டநேரம் காக்கவைத்தே சந்தித்தார் ஜெயலலிதா. வரலாறு!
News March 19, 2026
BREAKING: ரம்ஜான் விடுமுறை.. அறிவித்தது தமிழக அரசு

தமிழகம், புதுச்சேரியில் வரும் 21-ம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என இரு மாநில அரசுகளின் தலைமை காஜிகளும் அறிவித்துள்ளனர். வழக்கம் போல், இன்று மாலை பிறை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், இன்று பிறை தென்படாததால் வரும் சனிக்கிழமை ரம்ஜான் கொண்டாடப்படும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 19, 2026
Summer Tips: சூட்டைத் தணிக்க இத ட்ரை பண்ணுங்க…!

<<19427290>>கோடைக்காலம்<<>> தொடங்கிவிட்டாலே, சூட்டைத் தணிக்க தர்பூசணி, இளநீர் கடைகளை நோக்கித்தான் மக்கள் படையெடுப்பார்கள். இவற்றை விடவும் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுவது பாதாம் பிசின்தான். இரவு ஊறவைத்த பாதாம் பிசினை, காலையில் பால், மோர் உள்ளிட்ட பானங்களில் கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்குமாம். உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவும், ஜீரணக் கோளாறை சரிசெய்யவும் இது ரொம்பவே உதவியாக இருக்குமாம்.


