News October 22, 2025

நெல் கொள்முதல்: EPSக்கு அமைச்சர் பதிலடி

image

EPS ஆட்சியில் தினசரி 700 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 1,000 மூட்டைகளாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் வைக்கப்பட்டு, நெல் மணிகள் நாற்று நடும் அளவிற்கு வளர்ந்த சம்பவங்கள் உண்டு என்றும் <<18072011>>EPS<<>>-க்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக, நெல் கொள்முதலை அரசு தாமதிப்பதாக EPS விமர்சித்திருந்தார்.

Similar News

News October 24, 2025

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS

image

10, +2 பொதுத்தேர்வு தேதியை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை தற்போதே தயார் செய்துவிட்டது. அமைச்சர் அன்பில் மகேஸிடம் பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா இன்று ஒப்படைத்துள்ளார். நவ.4-ம் தேதி தேர்வு தேதி அடங்கிய விவரங்களை அமைச்சர் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன மாணவர்களே, ரெடியா..!

News October 24, 2025

திமுக கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை: நயினார்

image

சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விழாவிற்கு தன்னை அழைக்கவில்லை என்று செல்வப்பெருந்தகை அறிக்கை விட்டிருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இப்படிப்பட்டவர்களின் அரசால், தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதி தர முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News October 24, 2025

பிஹார் தேர்தல்: பல துணை முதல்வர் வேட்பாளர்கள்

image

பிஹாரில் எதிர்க்கட்சிகளின் சார்பில் இன்னும் பல துணை முதல்வர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என, CM வேட்பாளரும், RJD தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று பிஹார் மக்கள் தொகையில் 2.5% உள்ள மீனவர் சமுதாயத்தை சேர்ந்த முகேஷ் சஹானி, துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், ஆளும் NDA கூட்டணியின் CM வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!